"தமிழர்களின் தனிநாடு கோரிக்கை மீண்டும் வலுக்கும்" - இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் ஸ்ரீதரன்

இலங்கையில், தமிழ் மக்களின் தனிநாடு கோரிக்கை மீண்டும் வலுப்பெறும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
தமிழர்களின் தனிநாடு கோரிக்கை மீண்டும் வலுக்கும் - இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் ஸ்ரீதரன்
x
இலங்கையில், தமிழ் மக்களின் தனிநாடு கோரிக்கை மீண்டும் வலுப்பெறும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் ஸ்ரீதரன் கூறியுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீதரன், யாழ்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்தப்போது இவ்வாறு கூறினார். தமிழ் மக்களின் கோரிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஒரு தீர்வை தரவேண்டி வரும் என அவர் கூறினார். தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் செயலில் தமிழ் எம்பிக்கள் ஈடுபட வேண்டும் என்ற அவர், தற்போதைய அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியாது என்றார். ஜெனிவாவில் கொண்டுவரும் தீர்மானம் உள்ளிட்டவை இலங்கை அரசு அழுத்தம் கொடுக்கும் என்றும், அது அரசியல் தீர்வுக்கு வழியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்