ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்
இலங்கையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிபர் சிறிசேனாவால், புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கே தொடர்ந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் தங்கியிருந்து பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தி வருவதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்களை இதுவரை அவர்கள் ஒப்படைக்கவில்லை என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story