இலங்கையில் அரசியல் குழப்பம் : சிறிசேனாவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அந்தக் கூட்டமைப்பினர் அதிபர் சிறிசேனவை சந்தித்து பேசினர்.
இலங்கையில் அரசியல் குழப்பம் : சிறிசேனாவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு
x
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அந்தக் கூட்டமைப்பினர் அதிபர் சிறிசேனவை சந்தித்து பேசினர். அப்போது நாடாளுமன்றத்தை விரைவில் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படியே தாங்கள் செயல்பட இருப்பதாகவும் அதிபரிடம் வலியுறுத்தியதாக அந்தக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். நாட்டின் அரசியல் சூழலை சுமூகமான நிலைக்கு கொண்டு வருவதற்கு அதிபர் சிறிசேனா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை கொடுப்பது என உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்