தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண தயார் - இலங்கை பிரதமர் ராஜபக்சே

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண தாம் தயாராக இருப்பதாக இலங்கை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
தமிழர்  பிரச்சனைக்கு தீர்வு காண தயார் - இலங்கை பிரதமர் ராஜபக்சே
x
பிரதமர் அலுவலகத்தில் தம்மைச் சந்தித்த தமிழ் வர்த்தக சமூகத்தினர், சமூக நலப்பணியாளர்கள் இடையே பேசிய ராஜபக்சே, இலங்கையில் வசிக்கும் பல்வேறு இன மக்களிடையே, நல்லிணக்கத்தையும், சுமூக உறவையும் ஏற்படுத்தி நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதே தமது இலக்கு என குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சியில் இலங்கை வீழ்ச்சியடைந்து விட்டதாகவும், அதை மீட்டெடுக்க பிரதமராக பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் 
ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் ராஜபக்சே தெரிவித்தார். இலங்கை தமிழ் மக்கள் பொய்யான பிரசாரங்களை நம்பாமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் தமது புதிய அரசியல் பயணத்தில் கைகோர்த்துக்கொள்ள வருமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌சே அழைப்பு விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்