ஜூன் 14-ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
x
ஜூன் 14-ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு 

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையில்,அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 14 ஆம் தேதி காலை 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில்,கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என ஈ.பி.எஸ் ஓ.பி.எஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  

Next Story

மேலும் செய்திகள்