பாட்டியா? காதல் மனைவியா? என குழம்பித் தவித்த இளைஞர் : விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை - திருமணமாகி 3 மாதங்களில் முடிந்து போன வாழ்க்கை

காதல் மனைவி தனிக்குடித்தனத்திற்கு அழைத்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் புது மாப்பிள்ளை ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாட்டியா? காதல் மனைவியா? என குழம்பித் தவித்த இளைஞர் : விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை - திருமணமாகி 3 மாதங்களில் முடிந்து போன வாழ்க்கை
x
காதல் மனைவி தனிக்குடித்தனத்திற்கு அழைத்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் புது மாப்பிள்ளை ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவரின் மகன் ராஜ்குமார். 20 வயதான இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். 

இவர் கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரை சேர்ந்த உமா தங்கம் என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன் கரம் பிடித்துள்ளார். 

ஆஸ்பெட்டாஸ் கூரை கொண்ட சிறிய சைஸ் வீடு தான் ராஜ்குமாருடையது. இந்த வீட்டில் தன் பெற்றோர், தம்பி, பாட்டி, மனைவி, மாமியார் என வசித்து வந்துள்ளார். காதல் கணவனுடன் விரும்பியதை பேசும் அளவிற்கு வீட்டில் வசதி இல்லாதது உமா தங்கத்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சிறிய அளவிலான வீட்டில் அதிகம்பேர் இருப்பதால் தன் காதல் கணவருடன் அதிக நேரம் செலவிட முடியாத விரக்தியில் இருந்த உமா தங்கம் தன் கணவனை தனிக்குடித்தனம் வருமாறு வற்புறுத்தி உள்ளார். 

ஆனால் ராஜ்குமாரின் குடும்பத்திற்கோ இவர்கள் தனிக்குடித்தனம் செல்வதில் விருப்பமில்லை. குடும்பத்தை தனியாக பிரித்து செல்லாதே என ராஜ்குமாரின் பாட்டி கண்ணீர் விட்டு கதறவே, இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வந்துள்ளார் அவர்... 

காதல் மனைவியா? பார்த்து பார்த்து தன்னை வளர்த்த குடும்பமா? என கலங்கிய ராஜ்குமாருக்கு என்ன செய்வதென்றே தெரியாத அளவிற்கு விரக்தியும் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனிடையே வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற ராஜ்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் காலை ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில் அருகே வாயில் ரத்தம் வழிந்த நிலையில் ராஜ்குமார் சடலமாக கிடப்பது தெரியவந்தது. 

இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்படவே சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் சடலத்தை மீட்டனர். விசாரணையில் அவர் விஷம் குடித்து உயி​ரிழந்தது தெரியவந்தது. 

அப்போது அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்று விசாரித்த போது தான் தனிக்குடித்தன பிரச்சினையும் வெளியேவந்தது. யாருக்கு பரிந்து பேசுவது என்ற குழப்பத்தில் விபரீத முடிவை எடுத்திருப்பதும் தெரியவந்தது. 

பல கனவுகளோடு தொடங்கிய ஒரு இளைஞனின் வாழ்க்கை தொடங்கிய வேகத்திலேயே அணைந்து போனது சோகம்.. அதுவும் பேசித் தீர்க்க வேண்டிய ஒரு விஷயத்திற்காக உயிரை மாய்த்துக் கொண்டதும் வருத்தமே... 



Next Story

மேலும் செய்திகள்