அபின் கடத்தல் வழக்கில் கைதான பா.ஜ.க. நிர்வாகி - கட்சியில் இருந்து நீக்கி கரு.நாகராஜன் அதிரடி

பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு அபின் கடத்திய வழக்கில், கைதான பா.ஜ.க. நிர்வாகி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
அபின் கடத்தல் வழக்கில் கைதான பா.ஜ.க. நிர்வாகி - கட்சியில் இருந்து நீக்கி கரு.நாகராஜன் அதிரடி
x
பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு போதை மருந்து கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு காரில் 1.8 கிலோ அபின் கடத்தப்படுவது தெரிய வந்தது. காரில் வந்த பெரம்பலூர் டவுனை சேர்ந்த லூவாங்கோ அடைக்கலராஜ் உள்ளிட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை கைது செய்த போலீசார், 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான லூவாங்கோ அடைக்கலராஜ் பா.ஜ.க. நிர்வாகி ஆவார். இந்நிலையில், தமிழக பா.ஜ.க. பிற பிற்படுத்தப்பட்ட அணியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த லுவாங்கோ பி. அடைக்கலராஜ், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால்  கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்