"தி.மு.க.விலிருந்து என்னை நீக்கினாலும் கவலையில்லை" - எம்.எல்.ஏ. கு.க. செல்வம்
திமுகவிலிருந்து தம்மை நீக்கினாலும் கவலையில்லை என்று அக்கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கு.க. செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுகவிலிருந்து தம்மை நீக்கினாலும் கவலையில்லை என்று அக்கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கு.க. செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக தலைமையமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ராமர் படத்திற்கு மலர்தூவி வணங்கினார். பாஜக மூத்த நிர்வாகிகள், கு.க. செல்வத்திற்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம் தி.மு.க.வில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறியுள்ளது என்று குற்றம் சாட்டினார். பொது மக்களுக்கு உழைக்கவே, தான் எம்.எல்.ஏவாக ஆனதாக கு.க. செல்வம் தெரிவித்தார்.
Next Story