obc வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு - அவரவர் வீட்டுவாசலில் தனிநபர் இடைவெளியோடு போராட்டம் நடத்த சீமான் அழைப்பு
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. இதில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்' சார்பில் இன்று முன்னெடுக்கப்படும் அறப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்க வேண்டும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். காலை 11 மணியளவில் அவரவர் வீட்டுவாசலில் தனிநபர் இடைவெளியோடு போராட்டத்தை நடத்தவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Next Story