சாத்தான்குளம் காவல் நிலையம் முன் உள்ள மரத்தின் கிளை அகற்றம் - ஆய்வாளரை கடிந்து கொண்ட சிபிஐ அதிகாரிகள்

சாத்தான்குளம் காவல் நிலையம் முன் உள்ள மரத்தின் கிளையை, தற்போதைய காவல் ஆய்வாளர் வெட்டியதால், சிபிஐ அதிகாரியிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.
சாத்தான்குளம் காவல் நிலையம் முன் உள்ள மரத்தின் கிளை அகற்றம் - ஆய்வாளரை கடிந்து கொண்ட சிபிஐ அதிகாரிகள்
x
சாத்தான்குளத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, காவல் நிலையத்தின் முன்பு உள்ள வேப்ப மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆய்வாளரை கடிந்து கொண்ட சிபிஐ அதிகாரி, சாட்சிகளைக் கலைக்க முயற்சி செய்கிறீர்களா என கடுமையான முறையில் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிகிறது. அப்போது, காவல்நிலையத்தில் சுற்றி பாம்பு, பூச்சுகள் இருப்பதால் சுத்தம் செய்ததாக ஆய்வாளர் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் விசாரணை முடியும் வரை காவல் நிலையத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்