"பெரியார் பல்கலைகழக விரிவுரையாளர்களுக்கு சம்பளம் இல்லை" - பணியை உறுதி செய்ய கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் உரிய வருமானம் இல்லை என்றும், இதனால் தவித்து வரும் தங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனிமேலும் தங்களுக்கு பணி இருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளதால், பணியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story