கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயற்சி - கோவையை சேர்ந்த இருவர் அதிரடி கைது
கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 46 லட்சம் ரூபாய் ஹவலா பணத்தை வாளையார் சுங்கச்சாவடி அருகே கேரளா போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 46 லட்சம் ரூபாய் ஹவலா பணத்தை வாளையார் சுங்கச்சாவடி அருகே கேரளா போலீஸார் பறிமுதல் செய்தனர். சுங்கச்சாவடியில் கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி சென்ற
காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஓட்டுநரின் இருக்கைக்கு கீழ் இருந்து 16 லட்சம் ரூபாயும், பயணி ஒருவரின் சட்டையில் தனி பைகள் அமைக்கப்பட்டு அதில் 30 லட்சம் ரூபாயும் மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் 46 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story