கொரோனாவால் இறந்த 55 வயது நபர் : உடலை கொடுக்க ரூ.11 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை

சென்னையில், கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார் மருத்துவமனை, பதினோரு லட்சம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் இறந்த 55 வயது நபர் : உடலை கொடுக்க ரூ.11 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை
x
புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 55 வயதான அன்பழகன், கடந்த16ஆம் தேதி, கொரோனா மற்றும்  மூச்சுத்திணறலால் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆரம்பத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்தை செலுத்தினால்,  உடல் நிலை சீராகும் என  மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர். உடனடியாக உறவினர்கள் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கட்டியுள்ளனர். இதனையடுத்து கடந்த வாரம் மூன்று லட்ச ரூபாய் பணம் செலுத்தி உள்ளனர். அப்படி இருந்தும், நேற்று இரவு அன்பழகன்  உயிரிழந்து விட்டதாக  மருத்துவர்கள் கூறியுள்ளனர். 20 நாட்களாக சிகிச்சை அளித்ததற்கு  ஏழு லட்ச ரூபாய் மீதி பணம் கட்டினால் மட்டுமே உடலை தருவோம் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வேறுவழியில்லாமல், அன்பழகன் உடலை மருத்துவமனை நிர்வாகம், ஆம்புலன்ஸ் மூலம் காசிமேடு  மயானத்திற்கு அனுப்பி வைத்து அடக்கம் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்