சாத்தான்குளம் தந்தை, மகன் மரண விவகாரம் - தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் 126 புகார்கள்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு 126 புகார்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண விவகாரம் - தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் 126 புகார்கள்
x
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு 126 புகார்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தில், வியாபாரி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தனர். இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு பலர் புகார் எழுதியுள்ளனர். கடிதத்தை ஏற்ற ஆணையம், தமிழக டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி எஸ்.பி., கோவில்பட்டி சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மனித உரிமைகள் ஆணையத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து 126 மின்னஞ்சல் புகார்கள், அனுப்பப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்