முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
கடந்த 2001ஆம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொல்லப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை விரைவு நீதிமன்றம் 2007 ல் தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2001ஆம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொல்லப்பட்ட வழக்கில், 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை விரைவு நீதிமன்றம், 2007 ல் தீர்ப்பு வழங்கியது. இதைஎதிர்த்து, பூங்காநகர் மாணிக்கம், செல்வம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிந்ததை தொடர்ந்து, பூங்காநகர் மாணிக்கம், செல்வம் உள்ளிட்டோருக்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்ய நீதிபதிகள், 3 வாரங்களுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என ஆணையிட்டுள்ளனர்.
Next Story