ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு - ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு - ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
x
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய்  நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம், அவரது  மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும்  தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையும் இவ்வழக்கில் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் அஜய் குமார்,  குஹார் அமர்வு முன் ஆஜரான அமலாக்க துறை வழக்குரைஞர் இ - குற்ற பத்திரிக்கையை  தாக்கல் செய்தார். நீதிமன்றம் வழக்கமாக செயல்படும் போது,  இ-குற்ற பத்திரிக்கையின் நகலை சமர்பிக்க உத்தரவிட்ட  நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்