மயிலாடுதுறையில் மீண்டும் கறிவிருந்து கைது - வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸையும் கண்காணிக்கும் போலீஸ்

மயிலாடுதுறையில் மீண்டும் ஒரு கும்பல் கறி விருந்து நடத்தி கைதாகியுள்ளது.
மயிலாடுதுறையில் மீண்டும் கறிவிருந்து கைது - வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸையும் கண்காணிக்கும் போலீஸ்
x
மயிலாடுதுறை மாவட்டம் காத்திருப்பு கிராமம் கோயில்தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு கடந்த 27ம் தேதி பிறந்தநாள். இதனை முன்னிட்டு தன் நண்பர்களுக்கு வாழைத்தோப்பில் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் பாஸ்கர். 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து கறி சமைத்து சாப்பிட்டதுடன் தங்கள் கொண்டாட்டத்தை, வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசாக வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் போலீசார் கண்ணுக்கு பட, தடையை மீறி கறிவிருந்து நடத்திய 18 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் மூன்று பேரும் கைதும் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் கறி விருந்து கொண்டாட்டத்தை டிக் டாக்கில் பதிவிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த  நிலையில், தற்போது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மூலம் 18 பேருக்கு வலை விரித்துள்ளது மயிலாதுறை போலீஸ். இதனால், மயிலாடுதுறையில் சமூக வலைதள ஜாம்பவான்கள் அச்சமடைந்துள்ளனர்.  .

Next Story

மேலும் செய்திகள்