நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி - சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு

நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி - சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு
x
நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை, சிறப்பு  ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் கண்மாய், குளங்களில் 51 கோடி ரூபாய் மதிப்பில்  குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் குறுவை சாகுடியை மேற்கொள்ள வசதியாக இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவற்றை ஆய்வு செய்த குடிமராமத்து சிறப்பு கண்காணிப்பு ஐஏஎஸ் அதிகாரி, குடி மராமத்து பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணை திறப்பதற்கு முன் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்