மதுராந்தகம் அருகே மண் சரிந்து விழுந்து 2 கூலித் தொழிலாளர்கள் பலி - கிணற்றை தூர் வாரும் போது நேர்ந்த சம்பவம்

மதுராந்தகம் அருகே கிணற்றில் தூர் வாரும் போது மண் சரிந்து விழுந்ததில் 2 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மதுராந்தகம் அருகே மண் சரிந்து விழுந்து 2 கூலித் தொழிலாளர்கள் பலி - கிணற்றை தூர் வாரும் போது நேர்ந்த சம்பவம்
x
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் அருள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றை தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிணற்றுக்குள் 5 பேர் இறங்கி வேலை பார்த்தனர். அப்போது திடீரென கிணற்றின் கரையில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் எழிலரசு மற்றும் விஜி ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்