காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் - குண்டர் சட்டத்தில் 3 பேரை கைது செய்த போலீசார்

சேலம் அருகே காமராஜர் சிலையை அவமதித்ததாக 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் - குண்டர் சட்டத்தில் 3 பேரை கைது செய்த போலீசார்
x
சேலம் அருகே காமராஜர் சிலையை அவமதித்ததாக 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் ஓமலூர் அருகே தேக்கம்பட்டி கிராமத்தில் கடந்த 7 ஆம் தேதி இரவு குடிபோதையில் 3 பேர் காமராஜர் சிலையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதையடுத்து சுகவனேஸ்வரன், அரவிந்த், மற்றும் வெற்றிவேல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள்  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்