வடமாநிலத் தொழிலாளர்கள் 1,425 பேர் சிறப்பு ரயிலில் பீகாருக்கு அனுப்பி வைப்பு - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்டதில் வசித்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலமாக பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வடமாநிலத் தொழிலாளர்கள் 1,425 பேர் சிறப்பு ரயிலில் பீகாருக்கு அனுப்பி வைப்பு - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்
x
திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டதில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரத்து 425 பேர் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலமாக பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட அவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் பீகார் புறப்பட்டு சென்றனர். தொழிலாளர்களை அனுப்பி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ஆட்சியர் சிவராசு,  நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்