57 நாட்களுக்கு பின்னர் வந்த முதல் பயணிகள் ​விமானம் - விமானத்தில் வந்தவர்கள் ரஷ்ய விஞ்ஞானிகள்

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 57 நாட்களுக்கு பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு இன்று ஒரு பயணிகள் விமானம் வந்தது.
57 நாட்களுக்கு பின்னர் வந்த முதல் பயணிகள் ​விமானம் - விமானத்தில் வந்தவர்கள் ரஷ்ய விஞ்ஞானிகள்
x
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 57 நாட்களுக்கு பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு இன்று ஒரு பயணிகள் விமானம் வந்தது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் மூன்றாவது அணு உலையை பார்வையிட வந்த ரஷ்ய விஞ்ஞானிகள் குழு தான் அந்த விமானத்தில் வந்தவர்கள். ரஷ்யாவில் இருந்த வந்த 6 பேர் கொண்ட குழுவினர் அகமதாபாத்தில் இருந்து இன்று மதுரை வந்தனர். அவர்களை  வரவேற்ற விமான நிலைய அதிகாரிகள் குழு, அவர்களுக்கு  தெர்மல் ஸ்கிரீனிங் மூலம் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளதா என சோதனை மேற்கொண்டனர். இதனைத்  தொடர்ந்து, ரஷ்ய குழுவினர் கார்கள் மூலம் கூடங்குளத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்