கோவையில் இருந்து 3 ரயில்களில் புறப்பட்டு செல்லும் மக்கள் - இதுவரை 17 ரயில்களில் 23,000 பேர் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களை இன்று 3 ரயில்களில் அவர்களது சொந்த ஊருக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைத்து வருகின்றனர்.
கோவையில் இருந்து 3 ரயில்களில் புறப்பட்டு செல்லும் மக்கள் - இதுவரை 17 ரயில்களில் 23,000 பேர் அனுப்பி வைப்பு
x
கோவை மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களை இன்று  3 ரயில்களில், அவர்களது சொந்த ஊருக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைத்து வருகின்றனர். கோவையில் இருந்து இதுவரை 17 சிறப்பு ரயில்கள் மூலம் பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களுக்கு 23 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று 3 சிறப்பு ரயில்களில் வட மாநிலத்தவர்களை அதிகாரிகள் அனுப்பி வைத்து வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு வடமாநிலத்தவர் வந்த வண்ணம் உள்ள நிலையில், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசர் ஏற்பட்டுள்ளது. கோவையில் மட்டும் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்