கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை - முதல்வருக்கு ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தினர் பாராட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ஐ.சி.எம்.ஆர் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். அப்போது, தேசிய தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குனரும், கோவிட் 19 தேசிய பணிக் குழுவைச் சேர்ந்த முன்னணி உறுப்பினருமான மருத்துவர் மனோஜ் முரேக்கர் மற்றும் துணை இயக்குனர் மருத்துவர் பிரதீப் கவுர் ஆகியோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
---------
Next Story