"திமுகவை அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் இல்லை" - தலைமை செயலாளர் சண்முகம் அறிக்கை

திமுக எம்.பி.க்களை தலைமை செயலாளர் அவமதித்ததாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறிய குற்றச்சாட்டுக்கு தலைமை செயலாளர் சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
திமுகவை அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் இல்லை - தலைமை செயலாளர் சண்முகம் அறிக்கை
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக எம்.பி.க்கள் கொண்டுவந்த ஒரு லட்சம் மனுக்களை பெற்றுக்கொண்டதோடு உரிய நடவடிக்கை எடுப்பதாக தாம் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தபட்ச அலுவலர்களே பணியில் உள்ளதால் தேதியை உறுதியாக கூற இயலாது என தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் தொடர்ந்து திரும்ப திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இது தான் உங்கள் பிரச்சனை, எங்களின் சங்கடங்களை புரிந்து கொள்வதில்லை என ஆங்கிலத்தில் தெரிவித்ததாக கூறிய அவர் இதனை டி.ஆர்.பாலு திரித்து அறிக்கை வெளியிட்டிருப்பது மன வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். 
திமுக எம்.பி.க்களையோ, திமுகவையோ அவமதிக்கும் எண்ணம், எள்ளளவும் இல்லை என்றும் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்