மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்ற வழக்கு : "சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை

மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்ற வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கைதான முருகன் கலியபெருமாள் ஆகியோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்ற வழக்கு : சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை
x
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே சிறுமதுரையை சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்ற வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கைதான முருகன், கலியபெருமாள் ஆகியோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உயர்அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக போலீசார் கூறினர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்