100 நாள் வேலை திட்ட பணிகள் துவக்கம் - சமூக இடைவெளியை கடைபிடிக்கும் தொழிலாளர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் தாளவாடி வட்டாரங்களில் நூறு நாள் வேலை திட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் தாளவாடி வட்டாரங்களில் நூறு நாள் வேலை திட்ட பணிகள் தொடங்கியுள்ளது. நூறு நாள் வேலை திட்ட பணிக்கு வந்த பணியாளர்கள் பணியிடத்தில் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுகின்றனர். பின்னர் ஒதுக்கப்பட்ட பணிகளை சமூக இடைவெளியுடன் செய்து வருகின்றனர். ஒரு மாத காலமாக நூறு நாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளதால் கிராமப்புற ஏழை கூலி தொழிலாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story