சூறை காற்றில் சுக்குநூறான தற்காலிக சந்தை கூரைகள் - இரவோடு இரவாக சீரமைத்த மாவட்ட நிர்வாகம்

காஞ்சிபுரத்தில் வீசிய சூறைக் காற்றில் சுக்குநூறான தற்காலிக சந்தை கூரைகளை இரவோடு இரவாக மீண்டும் சீரமைத்து திறக்கப்பட்டது.
சூறை காற்றில் சுக்குநூறான தற்காலிக சந்தை கூரைகள் - இரவோடு இரவாக சீரமைத்த மாவட்ட நிர்வாகம்
x
காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று வீசிய சூறைக் காற்றில் இந்த சந்தையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தகரக் கொட்டகைகள் முற்றிலுமாக சேதமடைந்து சுக்கு நூறானது. இதையடுத்து இரவோடு இரவாக மீண்டும் இரும்பு தகர கொட்டகைகளை சீரமைத்து, சந்தை வழக்கம்போல திறக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்