தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை சிறை பிடித்து விசாரணை

எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 8 பேரையும் இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச்சென்றது.
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை சிறை பிடித்து விசாரணை
x
சனிக்கிழமை காலை புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஒரு படகையும், அதில் இருந்த 3 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில் அன்று மாலையே, எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த 2 படகுகளையும், அதில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை தனுஷ்கோடி பகுதிக்குள் வந்த இலங்கை மீனவர்கள் 3 பேரை இந்திய கடற்படை கைது செய்த நிலையில், அதற்கு போட்டியாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தாக கூறப்படுகிறது 



Next Story

மேலும் செய்திகள்