டி.என்.பி.எஸ்.சி. குருப் 4 தேர்வு முறைகேடு - சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ராமதாஸ் வரவேற்பு

டி.என்.பி.எஸ்.சி. குருப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. குருப் 4 தேர்வு முறைகேடு - சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ராமதாஸ் வரவேற்பு
x
டி.என்.பி.எஸ்.சி. குருப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், போட்டித் தேர்வுகள் நியாயமான முறையில் நடைபெறும் என்ற மாணவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டு இருப்பதற்கு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதையும் அவர் வரவேற்றுள்ளார். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்