"அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்" - ஸ்டாலின் வலியுறுத்தல்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜனநாயக முறைப்படி போராடுவோர் மீது பதிந்த அனைத்து வழக்குகளையும், உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்
x
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசைக் கண்டித்து கோலம் போடக் கூடாது என்ற அளவில், அதிமுகவின் பாஜக ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து போராட உரிமை உண்டு என்றால், எதிர்த்து போராடவும் உரிமை உண்டு தானே என, வினவியுள்ளார். ஊர்வலம் சென்றவர்கள் மீதான வழக்கு, கணக்கு காட்ட மட்டுமே உதவும் என்று கூறியுள்ள ஸ்டாலின், எதிர்ப்பை ஜனநாயக முறையில் கோலம் போட்டுக் காட்டுவது சமூகக் குற்றமா? எனக் கேட்டுள்ளார். தேவைகளை பூர்த்தி செய்து மட்டுமே மக்களின் மனங்களை வெல்ல முடியும் என்றும், அச்சுறுத்தல் மூலம் முடியாது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்