"பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெப்பச் சலனம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக கடலூர்,நாகப்பட்டினம், காஞ்சிபுரம்,திருவாரூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசான முதல் மிதமான மழைப் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story