அயோத்தி வழக்கு தீர்ப்பு : சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ள நிலையில் சென்னை மாநகர போலீசார் தயார் நிலையில் இருக்க காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.
அயோத்தி வழக்கு தீர்ப்பு : சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு
x
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ள நிலையில் சென்னை மாநகர போலீசார் தயார் நிலையில் இருக்க காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். தனியார் விடுதிகள் மற்றும் பிரச்சினைக்குரிய இடங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது என்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள காவல்துறை தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பயணிகளின் உடமைகள் சோதனைக்கு பின்னரே ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்