15 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது

நாகர்கோவில் அருகே 15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
15 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். நாகர்கோவிலை அடுத்த ஆனைப்பொற்றை கிராமத்தை சேர்ந்த லாரி ஒட்டுநர் சந்தோஷ்குமார்,  அறுகுவிளை பகுதியை சேர்ந்த  மாணவியை ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சந்தோஷை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே கடந்தாண்டு இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், சந்தோஷ் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்