தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது - சென்னை வானிலை மையம் அறிவிப்பு
x
தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மிதமான மழைபெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடைவெளி விட்டு மிதமான மழைபெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்