சென்னையில் இருந்து கோவளம் செல்கிறார், ஜி ஜின்பிங்
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ஜின்பிங் இரவு சென்னையில் தங்குகிறார். இதையடுத்து இன்று காலை சென்னை கிண்டியில் இருந்து கோவளத்துக்கு காரில் செல்கிறார். அங்கு பிரதமர் மோடி தங்கியுள்ள ஓட்டலில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு நாடுகளில் உயர்மட்ட குழுவினரும் இதில் பங்கேற்கின்றனர். அப்போது, வங்கதேசம்- சீனா - இந்தியா - மியன்மர் நாடுகளை இணைக்கும் தாழ்வார திட்டம் மற்றும் இந்தியா, சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story