நீலகிரி : 4-வது நாளாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், ஆறு நாட்களாக தொடரும் கனமழைக்கு, பல்வேறு இடங்களில் மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : 4-வது நாளாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
x
நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், ஆறு நாட்களாக தொடரும் கனமழைக்கு, பல்வேறு இடங்களில் மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பெரிய பெரிய மரங்கள் சாலையில் சாய்ந்து கிடக்கின்றன. மேலும், மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு புத்தூர்வயல் கிராமத்தை சூழ்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக, 4-வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்