மாயாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் : ஆதிவாசிகள் ஆபத்தான பரிசல் பயணம்
சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசிகள், கரைபுரண்டு ஓடும் மாயாற்றில் ஆபத்தான பரிசல் பயணம் மேற்கொள்கின்றனர்.
சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசிகள், கரைபுரண்டு ஓடும் மாயாற்றில் ஆபத்தான பரிசல் பயணம் மேற்கொள்கின்றனர். ஆற்றின் வேகத்திற்கு ஏற்ப துடுப்பு போடும் பரிசல் ஓட்டி, மக்களை பாதுகாப்பாக அக்கரையில் சென்று விடுகிறார். காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையிலும், உயிரை பணையம் வைத்து, தங்களது அன்றாட தேவைகளை ஆதிவாசிகள் நிறைவேற்றி வருகின்றனர். தங்கள் நலனை கருத்தில் கொண்டு, மாயாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என தெங்குமரஹாடா மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story