மனைவியை விடுத்து, 10ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை

பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசிவந்த திருமணமான இளைஞரை, மாணவியின் உறவினர்கள் கட்டைகளால் அடித்தும், அரிவாளால் வெட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை விடுத்து, 10ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை
x
திருச்சி அடுத்த திருவானைக்காவல் திம்மராய சமுத்திரத்தை சேர்ந்தவர் மணி என்ற புல்லட் மணி. இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை தீவிரமாக காதலித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் சகோதரர்கள், புல்லட் மணியை வழிமறித்து கண்டித்துள்ளனர். இதை கேட்க மறுத்த அவர், தம்மை மிரட்டியவர்களை நண்பர்களுடன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புல்லட் மணியை இளைஞர்கள் வழிமறித்து கேட்டுள்ளனர். இதில், தப்பி ஓடிய மணியை பிடித்த அவர்கள், அடகுக் கடைக்குள் புகுந்த மணியை வெளியே இழுத்து வந்த சரமாரி தாக்கிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது, பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்