திருச்சி மாநகராட்சி வரி உயர்வுக்கு தி.மு.க. எதிர்ப்பு : திமுக தொண்டர்கள் மனித சங்கிலி போராட்டம்
திருச்சியில், மாநகராட்சி வரிகள் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
திருச்சியில், மாநகராட்சி வரிகள் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. காட்டூர் ஆயில் மில்லில் இருந்து திருவெறும்பூர் வரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டார். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை இரு சக்கர வாகனத்தில் அன்பில் மகேஷ் சென்று, போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Next Story