புதிய மணல் குவாரிக்கு தடை கோரிய வழக்கு : பொதுப்பணித்துறை செயலருக்கு நோட்டீஸ்

திருச்சி, உன்னியூர் கிராமத்தில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக, பொதுப்பணித் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
புதிய மணல் குவாரிக்கு தடை கோரிய வழக்கு : பொதுப்பணித்துறை செயலருக்கு நோட்டீஸ்
x
திருச்சி, உன்னியூர் கிராமத்தில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக, பொதுப்பணித் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுமதி, என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த, நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு, அரசு மணல் குவாரிகளால் பொதுமக்கள் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என கேள்வி எழுப்பினர். பின்னர், மனு குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்