"மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செயல்பட்டு" - ஸ்டாலின் பெருமிதம்

தமிழக மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருவதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துளார்.
மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செயல்பட்டு - ஸ்டாலின் பெருமிதம்
x
திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் டெல்லிக்கு சென்று, என்ன செய்ய போகிறார்கள் என்று எதுவுமே செய்ய இயலாதவர்கள் கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார். அவர்களின் வாயை அடைக்கும் விதமாக தமிழக மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நாள்தோறும் செயல்பட்டு வருவதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துளார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் உரிமைப் போர் முழக்கமாக ஒவ்வொரு விவாதத்திலும் உயரிய கருத்துகளை திமுக கூட்டணி  எம்.பி.க்கள் எடுத்துரைப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு, அஞ்சல் தேர்வு, ரயில்வே துறை உள்ளிட்ட பல விவகாரங்களில் குரல் கொடுத்து திமுக கூட்டணி எம்.பி.க்கள் அயராது பாடுபட்டு வருதாகவும் அதில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்