"தமிழ் மொழி பெருமையை அளக்க முயற்சி" - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ் மொழி பெருமையின் நீள, அகலத்தை அளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
தமிழ் மொழி பெருமையை அளக்க முயற்சி - அமைச்சர் பாண்டியராஜன்
x
மேட்டூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ செம்மலை, தமிழ் மொழியில் புதிய சொற்கள் உருவாக்கும் பணி தொடர்கிறதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சொற்குவை திட்டத்திற்கு, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, புதிய தமிழ் சொற்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 476 வார்த்தைகள் தான் உள்ளன என்றும், ஆனால், தமிழில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். புதிய சொற்கள் உருவாக்கும் பணியில் இளைஞர்களை அதிக அளவில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், தமிழ் மொழி பெருமையின் நீள, அகலத்தை அளவிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். கலைசொற்கள் மட்டுமின்றி அறிவியல் சொற்களும் தமிழில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்