விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
x
தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கு முதலமைச்சர் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் கழிப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

கடந்த எட்டு ஆண்டுகளிலும் உரிய காலத்தில் குறுவைப் பாசனத்திற்கு நீர் திறந்து விட வழிகாணாமல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு  அழித்து வருவது மிகுந்த வேதனையளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 -ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு, காலதாமதமின்றி மேட்டூர் அணையை  திறக்க வேண்டும் என ஸ்டாலின் அதில் வலியுறுத்தி உள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்