கும்பகோணத்தில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை : சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சிகள்...

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடன் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை : சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சிகள்...
x
பானாதுரை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரிடம் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தும் சுப்பிரமணியன் வட்டிக்கு கடன் வாங்கியதாக தெரிகிறது. கடனை திருப்பி கேட்ட விவகாரத்தில், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது முன்விரோதமாக மாறியுள்ளது. இதனிடையே, சுப்பிரமணியனின் மகன் அருணுக்கும், கடன்கொடுத்த தரப்புக்கும் அண்மையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு கடைக்கு வந்த நபர் ஒருவர், அருணை சரமாரியாக வெட்டினார். சத்தம் கேட்டு ஓடிவந்தவர்களையும் அந்த நபர் மிரட்டி விரட்டியுள்ளார். பின்னர் இளைஞர் அருணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. வழக்குப் பதிவு செய்து கும்பகோணம் கிழக்கு போலீசார், கொலையாளியை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்