தேர்தல் ஆணையத்திற்கு அழகிரி கடும் எச்சரிக்கை

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திருச்சயில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
தேர்தல் ஆணையத்திற்கு அழகிரி கடும் எச்சரிக்கை
x
திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திருச்சயில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தேர்தல் ஆணையம் சென்ற முறையும் இந்த முறையும் கடுமையான தோல்வியை சந்தித்திருக்கிறது என்றார். கடந்த தேர்தலில் ஆளும் கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த முறையும் அதே போல தான் நடப்பதாகவும்,துரை முருகன் வீட்டில் சோதனை செய்தது போல அதிமுகவில் இருக்கிற அனைவரிடமும் சோதனை செய்யுங்கள் என்றார். அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைய இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்