அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை - ரகசிய விசாரணை நடத்திய குழந்தைகள் நல வாரியம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை - ரகசிய விசாரணை நடத்திய குழந்தைகள் நல வாரியம்
x
ஆரணி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த உமேஷ்குமார், நித்யா தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர். இந்நிலையில் பையூர் கிராம அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியை நித்யா தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மாவட்ட ஆட்சியரியம் உமேஷ் புகார் தெரிவித்துள்ளார். 

அதனையடுத்து குழந்தைகள் நல வாரியம் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் ஓரு சில மாணவர்களுக்கு ஆசிரியை நித்யா தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததை உறுதி செய்தனர்.

இதனைதொடர்ந்து போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆசிரியை நித்யா கைது செய்யப்பட்டுள்ளார்.  பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியை நித்யாவை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்