ஜோசியரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி - போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை

சிவகங்கை ஜோசியரை மிரட்டி, கோவை தம்பதியினர் 5 லட்ச ரூபாயை சுருட்டிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
ஜோசியரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி - போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை
x
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த, பாலமுருகன், ஜோதிடம் பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.அவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு​ தெக்குபாளையத்தை சேர்ந்த குபேந்திரன், அவரது மனைவி காயத்ரி ஆகியோர்  ஜோசியம் பார்க்க சென்றுள்ளனர்.அப்போது, ஜாதகத்தில் கண்டம் இருப்பதாக பாலமுருகன் கூறியதையடுத்து, வீட்டிற்கு வந்து ப​ரிகாரம் செய்ய வேண்டும் என்றார். இதனையடுத்து, ஜோசியர் பாலமுருகன், கடந்த 14 ஆம் தேதி,தெக்குப்பாளையத்தில் உள்ள தம்பதியினரின் வீட்டிற்கு சென்றார். அங்கு, குபேந்திரன் மற்றும் அவரது மனைவி காயத்திரி இருவரும், பாலமுருகனை போலி சாமியார் என்றும், பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பவர் என கூறி, மிரட்டியுள்ளனர்.மேலும், 40 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளனர். அப்போது பாலமுருகன் தமது தந்தையிடம்,தொலைபேசி மூலம், 5 லட்ச ரூபாய், கேட்டு, தம்பதியினரிடம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் தலைமறைவான குபேந்திரன், மனைவி காயத்ரி, நண்பர்கள் போத்திராஜ், சதீஷ் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்