தேர்தல் நடத்தை விதிகள் அமல் - வாகன சோதனை தீவிரம்
ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் முறையான ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 20 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியூத்து அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது ராஜ் என்பவர் முறையான ஆவணங்கள் இல்லாமல் 20 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்,ஆவணங்களை சமர்பித்து பணத்தை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தினர்
Next Story