கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் - 2 ஆயிரம் பேர் திரண்டதால் பரபரப்பு

திருவாரூர் அருகே கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து இரண்டாயிரம் பேர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் - 2 ஆயிரம் பேர் திரண்டதால் பரபரப்பு
x
திருவாரூர் அருகே, கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து இரண்டாயிரம் பேர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு  அறிவித்த நிவாரண உதவிகள் இதுவரை வழங்கவில்லை என்று  குடவாசல் தாலுகாவுக்கு உட்பட்ட  24 கிராமங்களை சேர்ந்தவர்கள் குடவாசல் - கொரடாச்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்த, மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்